i

Who We Are

Ayyappan Singarasu Makkal Sevai Arakattalai.

அனைவருக்கும் வணக்கம்

அய்யப்பன் சிங்கராசு ஆகிய‌ நான் சாதி மதம் பாராமல் மக்கள் பணியே மகேசன் பணியாக நினைத்து என் வாழ்க்கையில் முடிந்த வரை பிறர்க்கு உதவுவதை என்னுடைய வாழ்வின் லட்சியமாக வாழ்ந்து வருகிறேன்.

ஏழை எளிய‌ மக்களின் வாழ்வாதரம் மேம்படவும், அனைவரும் மகிழ்ச்சியாக வாழவும், கல்வி, மருத்துவ உதவிகள் அனைத்து மக்களுக்கும் கிடைத்து அனைவரும் சிறப்பாக வாழவும், சமுதாயம் தழைத்து வாழவும் நான் உங்களிள் ஒருவனாக உங்கள் துயர் துடைக்க பாடுபடுவேன்

அதற்காக நான் என்னுடைய வருமானத்திலிருந்து "அய்யப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளை" ஆரம்பித்து ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கவும் சமுதாய முன்னேற்றத்திற்கும் கீழ்க்கண்ட பணிகளை‌ செய்து வருகிறேன்

1). அன்னதானங்கள் 2). மருத்துவ உதவிகள் 3). கல்வி உதவிகள் 4). கொரோனா கால உதவிகள் 5). கோவில் கட்டுதல், கோவில் சீரமைத்தல் மற்றும் மசுதி சீரமைத்தல் 6).விளையாட்டுகளை ஊக்குவித்து நிகழ்ச்சிகள் 7). மரம் நடுதல் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் 8). மாணவ மாணவிகளை ஊக்குவித்து போட்டி நிகழ்ச்சிகள் 9). ஏழை பெண்களுக்கு திருமண உதவிகள் 10). ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்ட உதவிகள்

இந்த பணிகள் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருளும், அன்பான மக்களின் ஆதரவும் வேண்டும் என வேண்டுகிறேன்

என்றும் மக்கள் சேவையில் அன்புடன் அய்யப்பன் சிங்கராசு அய்யப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளை மயிலாடுதுறை மாவட்டம்

To work with us

Are you ready to server the society.. they why stand alone.. join with us.. lets work together..